search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாவது ஒருநாள் போட்டி"

    மவுண்ட் மவுங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #NZvSL #ThisaraPerera
    மவுண்ட் மவுங்கானுய்:

    நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
     
    கொலின் முன்றோ சிறப்பாக ஆடி 87 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 90 ரன்னில் அவுட்டானார். கடைசி வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீசம் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
     
    இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.



    அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் திசாரா பெரேரா வெற்றிக்காக போராடினார். அவர் அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார். #NZvSL #ThisaraPerera
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA
    ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கிம்பர்லியில் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    ஆனால் ஜிம்பாப்வே அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால் 7 விக்கெட்டுகளுக்குள் 101 ரன்களை எடுத்து தத்தளித்தது. அதன்பின்னர் இறங்கிய டேல் ஸ்டெயின் பொறுப்புடன் ஆடினார். அவர் அரைசதமடிக்க, 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவரில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    ஜிம்பாப்வே சார்பில் சதாரா 3 விக்கெட்டும், ஜார்விஸ், டிரிபானோ, மவுடா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வே வீரர்களை விரைவில் வெளியேற்றினர்.

    ஜிம்பாப்வே அணி 24 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் இம்ரான் தாஹிர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டேல் ஸ்ட்ர்யின் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால், ஜிம்பாப்வே அணியை 120 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக டேல் ஸ்டெயின் தேர்வு செய்யப்பட்டார். #ZIMvRSA
    வங்காள தேசத்துக்கு எதிராக நாளை நடக்கவுள்ள 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ஸ்இண்டீஸ் மோதுகிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு வெஸ்ஸ்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #BANvWI
    வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி நாளை நடக்கிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு வெஸ்ஸ்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #BANvWI #ODI
    ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பக்தர் சமான் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #PAKvZIM #Pakistan #Zimbabwe
    புலவாயோ:

    பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், ஜிம்பாப்வேயுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி புலவாயோ நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன் சாரி, சாமு சிபாபா ஆகியோர் களமிறங்கினர். இருவ்ரும் விரைவில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஹாமில்டன் மசகட்சா அரை சதமடித்து அசத்தினார். இவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பீட்டர் மூர் 50 ரன்களில் அவுட்டானார்.



    இவர்களை தவிர மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 49.2 ஓவரில் 194 ரன்களில் ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஹசன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் அல் ஹக், பகர் சமான் ஆகியோர் இறங்கினர்.

    இமாம் அல் ஹக் 44 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து பாபர் அசம் இறங்கினார். இருவரும் சேர்ந்து  அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
     
    இறுதியில், பாகிஸ்தான் அணி 36 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பகர் சமான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் எடுத்தார்.

    ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.  #PAKvZIM #Pakistan #Zimbabwe
    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜேசன் ராய் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் அதிரடியாக ஆடி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    அடுத்து இறங்கிய டேவிட் வில்லே அதிரடியாக ஆடினார். லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட். இது சர்வதேச அளவில் 12-வது சதம். டேவிட் வில்லே 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இறங்கினர். ரோகித் 15 ரன்னிலும் ஷிகர் தவான் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவ்ருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். தோனி 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

    அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளங்கெட் 4விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கிறது.
    ×